Advertisement

பிரமாண்ட செட் அமைத்து தனுசின் 50வது படத்திற்க படப்பிடிப்பு

By: Nagaraj Sat, 08 July 2023 08:49:44 AM

பிரமாண்ட செட் அமைத்து தனுசின் 50வது படத்திற்க படப்பிடிப்பு

சென்னை: தனுசின் 50வது படம் சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

dhanush,visuals,shooting,information,grand sets ,தனுஷ், காட்சிகள், படப்பிடிப்பு, தகவல்கள், பிரமாண்ட செட்

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ராயர் என்ற பெயர் வைக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அதில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :