Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; மருத்துவமனை அறிக்கை

By: Monisha Tue, 18 Aug 2020 11:36:29 AM

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; மருத்துவமனை அறிக்கை

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல நலம் பெற்றுவர பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதுபோல் இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார். எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

singer,sb balasubramaniam,health,treatment,corona virus ,பாடகர்,எஸ்.பி.பாலசுப்ரமணியம்,உடல்நிலை,சிகிச்சை,கொரோனா வைரஸ்

அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார். நன்றி" என கூறி உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags :
|
|