- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ்...திரையுலகினர் மகிழ்ச்சி
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ்...திரையுலகினர் மகிழ்ச்சி
By: Monisha Mon, 24 Aug 2020 12:08:29 PM
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாக சென்னை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எஸ்பிபி அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திரையுலகினர் உட்பட ஒட்டுமொத்த இசை ரசிகர்கள் இரண்டு நிமிடங்கள் அவருக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில் இந்த கூட்டுப்பிரார்த்தனையின் பலனாக எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்களும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார். தங்களது பிரார்த்தனை பலித்ததாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.