Advertisement

அறம் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவு... நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு

By: Nagaraj Tue, 14 Nov 2023 5:02:08 PM

அறம் படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவு... நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு

சென்னை: நயன்தாரா நெகிழ்ச்சி... அறம் திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. கடின உழைப்பினாலும், தனித்துவமான நடிப்பினாலும், மிகச்சிறந்த நடிகையாக திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக முன்னேறினார் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்தும் கதைகளில், நயன்தாரா நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ஹிட் அடித்தன. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

aram,nayanthara,six years,annapoorani,title,resilience ,அறம், நயன்தாரா, ஆறு ஆண்டுகள், அன்னபூரணி, டைட்டில், நெகிழ்ச்சி

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படமான 'ஜவான்', அவரை வட இந்தியாவிலும் கொண்டு போய் சேர்த்தது. தென்னியந்தாவின் முன்னனி நடிகையாக நயன்தாரா திகழ்ந்தாலும், லேடி சூப்பர்ஸ்டார் எனும் பட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் இவர் நடித்த அறம் திரைப்படமே பெற்றுத் தந்தது.

இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறம் படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், அறம் படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், எப்போதும் அப்படம் அவருக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நயன்தாராவின் 75 திரைப்படமான 'அன்னப்பூரணி' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|