Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் சவுந்தர்யா

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் சவுந்தர்யா

By: vaithegi Thu, 28 Sept 2023 11:20:04 AM

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் சவுந்தர்யா

மீண்டும் தயாரிப்பாளராக சவுந்தர்யா ... நடிகர் ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா . ‘கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களை இயக்கிய இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். அந்த வகையில் அமேசான் பிரைம் தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற வெப் தொடரைத் தயாரிக்கிறார்.

நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இதனையடுத்து இதன் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

soundarya,producer ,சவுந்தர்யா ,தயாரிப்பாளர்

இந்த நிலையில், இப்படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதைத் தனது சமூக வலைதளத்தில் சவுந்தர்யா பகிர்ந்து உள்ளார்.

அதில், "2010-ம் ஆண்டு ‘கோவா’ படத்தை தயாரித்தேன். 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்து உள்ளேன். படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :