Advertisement

கதை நாயகி கோவைசரளா: உலக நாயகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்

By: Nagaraj Wed, 15 June 2022 6:50:25 PM

கதை நாயகி கோவைசரளா: உலக நாயகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: கதை நாயகியாக நடிக்க உள்ள கோவை சரளா நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்று உள்ளார்.

முந்தானை முடிச்சு படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான கோவை சரளா தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தற்போது பிரபு சாலமான் இயக்கும் செம்பி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது பேத்திக்கு நடந்த ஒரு அநியாத்துக்கு பழிவாங்கும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

actor kamal,kovai sarala,meet,greetings,story heroine ,நடிகர் கமல், கோவை சரளா, சந்திப்பு, வாழ்த்து, கதை நாயகி

செம்பி என்கிற மலைவாழ் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் அவருடன் பிக்பாஸ் புகழ் அஸ்வின் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தனர். அப்போது அவருக்கு படத்தின் டீசரை போட்டு காண்பித்தனர். பின்னர் கமல் படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த சந்திப்பு கோவை சரளாவின் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. சதிலீலாவதிக்கு பிறகு கதையின் நாயகியாக நடித்திருப்பதால் கமலை சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதால் இந்த சந்திப்பு நடந்தது.

Tags :
|