Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அது போலியான ப்ளாஸ்டிக்‌ பாம்பு... வனத்துறை பிரச்சனை குறித்து சுசீந்திரன் விளக்கம்!

அது போலியான ப்ளாஸ்டிக்‌ பாம்பு... வனத்துறை பிரச்சனை குறித்து சுசீந்திரன் விளக்கம்!

By: Monisha Sat, 07 Nov 2020 4:53:34 PM

அது போலியான ப்ளாஸ்டிக்‌ பாம்பு... வனத்துறை பிரச்சனை குறித்து சுசீந்திரன் விளக்கம்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சிம்பு கையில் ஒரு பாம்பை பிடித்து இருப்பது போன்ற இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுசீந்திரன் இயக்கத்தில்‌ சிம்பு நடித்து வரும்‌ ஈஸ்வரன்‌ படத்தின்‌ இறுதிக்கட்டப்‌ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்‌ படப்பிடிப்பு தளத்‌தில்‌ சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்‌சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில்‌, அந்தக்‌ காட்சி போலியான ப்ளாஸ்டிக்‌ பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம்‌. அது படத்தில்‌ நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ்‌ செய்யப்படவுள்ளது.

plastic‌ snake,forest,suchindran,simbu,shooting ,ப்ளாஸ்டிக்‌ பாம்பு,வனத்துறை,சுசீந்திரன்,சிம்பு,படப்பிடிப்பு

இந்தக்‌ காட்சியைப்‌ பற்றிய செய்தியையும்‌, புகைப்படத்தையும்‌ தயாரிப்பு நிறுவனம்‌ சார்பாகவோ மற்றவர்கள்‌ மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ்‌ செய்யும்‌ போது இந்த வீடியோ சில நபர்களால்‌ கசிந்துள்ளது. எங்கள்‌ தரப்பிலிருந்து காட்சிகள்‌ எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள்‌ அதைப்‌ பற்றி விசாரித்து வருகின்றோம்‌.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்‌ ஒருவர்‌ அளித்த புகார்‌ தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட்‌ எடிசன்‌ எங்களை விசாரணைக்கு அழைத்தார்‌, நாங்கள்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம்‌. அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில்‌ சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்‌. படத்தின்‌ முழு படப்பிடிப்பும்‌ தமிழக அரசின்‌ வழிகாட்டிதலைக்‌ கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம்‌ சம்பந்தப்பட்‌ட செய்திகள்‌, புகைப்படங்கள்‌ அனைத்தும்‌ ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|