Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சொன்னதை சொன்னபடி செய்த சுசீந்திரன்; ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் சிம்பு

சொன்னதை சொன்னபடி செய்த சுசீந்திரன்; ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் சிம்பு

By: Nagaraj Sun, 08 Nov 2020 11:19:09 PM

சொன்னதை சொன்னபடி செய்த சுசீந்திரன்; ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் சிம்பு

சொன்னதை சொன்னபடியே செய்து முடித்து விட்டார் இயக்குநர் சுசீந்திரன். இதற்கு நடிகர் சிம்பு பக்கபலமாக இருந்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. "ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்." என்பார்கள். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியான உடனே சிம்புவை வைத்தா.? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் பலவாறு கேள்விகளும், கிண்டல்களும் எழுந்தன.

simbu,suchindran,30 days,shooting,completed ,
சிம்பு, சுசீந்திரன், 30 நாட்கள், படப்பிடிப்பு, நிறைவு

ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் அழைத்துச்சென்று சுசீந்திரன் சொன்னது போலவே. எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்து சென்னைக்கு வந்துவிட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்துவிட்டாராம் என்பதுதான் ஹைலைட்.

இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். தற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த 'மாநாடு' ஷூட்டிங் ஒரு நாள் தள்ளிப் போய் 10-ம் தேதி துவங்குகிறதாம். இதுகூட சுசீந்திரன் படத்திற்காக சிம்பு, டப்பிங் பேசி முடிக்கத்தானாம். எப்படியோ சிம்பு பழைய பார்ம்க்கு வந்து விட்டார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

Tags :
|