Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூர்யா 42 படக்குழு சமூக வலைத்தளத்தில் கசியும் வீடியோக்கள் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை

சூர்யா 42 படக்குழு சமூக வலைத்தளத்தில் கசியும் வீடியோக்கள் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை

By: Nagaraj Thu, 29 Sept 2022 06:42:41 AM

சூர்யா 42 படக்குழு சமூக வலைத்தளத்தில் கசியும் வீடியோக்கள் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை

சென்னை: 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு சூர்யா 42 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

report,crew,alert,action,surya film ,அறிக்கை, படக்குழு, எச்சரிக்கை, நடவடிக்கை, சூர்யா படம்

இந்நிலையில் சூர்யா 42 படக்குழு சமூக வலைத்தளத்தில் கசியும் வீடியோக்கள் குறித்து பதிவிட்டுள்ளது. அதில், "சமூக வலைதளங்களில் 'சூர்யா 42' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் இரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது.


இந்த படத்தை பிரமாண்டமான அனுபவமாக உங்களிடம் தருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதனால் தயவு செய்து சூர்யா 42 சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம். அப்படி பகிர்ந்தால் அதனை உடனடியாக நீக்கி விடுங்கள். இதனை மீறினால் உரிமை மீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags :
|
|
|
|