Advertisement

சூர்யாதேவி தீடீர் கைது; தவிக்கும் குழந்தைகள்

By: Monisha Thu, 23 July 2020 11:31:09 AM

சூர்யாதேவி தீடீர் கைது; தவிக்கும் குழந்தைகள்

வனிதா திருமணம் பிரச்சனையில் அவ்வப்போது காரசாரமான வீடியோக்களை பதிவு செய்து வந்த சூர்யாதேவி, ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி, வனிதா மீதும், வனிதா சூர்யாதேவி மீதும் வடபழனி காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக நேற்று இரவு சூர்யாதேவியை காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சூர்யாதேவி தனது குழந்தைகளிடம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறி போலீசாருடன் சென்றுள்ளார்.

vanitha,surya devi,arrested,children ,வனிதா,சூர்யாதேவி,கைது,குழந்தைகள்

ஆனால் இன்று காலை வரை வராததால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சூர்யாதேவி தரப்பில் இருந்து அவரது யூடியூபில் ஒரு வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் சூர்யாதேவியின் குழந்தைகள் வீட்டில் தனியாக பரிதாபமாக இருக்கும் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து வனிதா மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

Tags :