Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தோல்வியை தழுவினார் டி.ராஜேந்தர்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தோல்வியை தழுவினார் டி.ராஜேந்தர்

By: Monisha Mon, 23 Nov 2020 4:32:24 PM

திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தோல்வியை தழுவினார் டி.ராஜேந்தர்

சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார்.

இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.

film,producer,election,success,failure ,திரைப்படம்,தயாரிப்பாளர்,தேர்தல்,வெற்றி,தோல்வி

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் நடந்தது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார்.

இதேபோல் துணைத்தலைவர் தேர்தலிலும் டி.ராஜேந்தர் அணி தோல்வி அடைந்தது. அவரது அணியைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்பவில்லை. முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 475 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் 425 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags :
|