- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய்சேதுபதி நடித்துள்ள 2 படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை!
விஜய்சேதுபதி நடித்துள்ள 2 படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை!
By: Monisha Thu, 17 Sept 2020 09:36:42 AM
விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலால் தியேட்டர்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய படங்கள் திரையரங்குகளுக்கு பதிலாக இணையதளமான ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் அடுத்த மாதம் 2-ந்தேதி ஜிபிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 2 படங்களையும் சீனுராமசாமி இயக்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய 2 படங்களும் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் கொரோனா பரவலை பொறுத்து தியேட்டரா? ஓடிடி தளமா? என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்வார்கள்.
மாமனிதன் படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இசையமைத்து இருப்பது சிறப்பு. பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இளையராஜா பிறந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினோம். பண்ணைய புரத்தில் பிறந்த குயிலே என்ற பாடலும் உள்ளது. இடம்பொருள் ஏவல் படத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவிஷாலும் இணைந்து நடித்துள்ளனர்" என்றார்.