- வீடு›
- பொழுதுபோக்கு›
- தென்னிந்திய படங்களிலிருந்து விலகி இருப்பது ஏன் என்பது பற்றி மனம் திறந்துள்ளார் தமன்னா
தென்னிந்திய படங்களிலிருந்து விலகி இருப்பது ஏன் என்பது பற்றி மனம் திறந்துள்ளார் தமன்னா
By: vaithegi Wed, 04 Oct 2023 10:30:02 AM
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து கொண்டு வருகிறார் தமன்னா.‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடித்த ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.இதையடுத்து இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தென்னிந்திய படங்களில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது:
தென்னிந்திய சினிமாவில், சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. மேலும் இயக்குநர்களிடம் அதைக் குறைக்கும்படி கேட்டிருக்கிறேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கினேன்.
தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வெற்றி இந்தியில் எனக்கு கிடைக்கவில்லையே என கேட்கிறார்கள். அதை தனிப்பட்ட தோல்வியாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு படம் பலரின் பங்களிப்புடன் உருவாகிறது.
அந்த வகையில் எனது வெற்றி, தோல்வி இரண்டிருந்தும் விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுகிறேன். நடிப்பது எனது விருப்பம். அது என்னை மிகவும் உற்சாகப் படுத்துகிறது என அவர் கூறினார்.