Advertisement

தொலைக்காட்சி நடிகை விஷம் குடித்து தற்கொலை

By: Monisha Tue, 02 June 2020 3:07:20 PM

தொலைக்காட்சி நடிகை விஷம் குடித்து தற்கொலை

பெங்களூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சந்தனா பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை சந்தனா நேற்று திடீரென தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அலறியடித்து மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே சந்தனாவின் செல்போனை போலீசார் சோதனை செய்ததில், செல்போனில் ஒரு செல்பி வீடியோ இருப்பதை பார்த்தனர். அதில் அவர் விஷம் குடித்து கொண்டே தன்னுடைய மரணத்திற்கு தினேஷ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tv actress,santana,kannada serial,suicide ,தொலைக்காட்சி நடிகை,சந்தனா,கன்னட சீரியல்,தற்கொலை

சந்தனா, தினேஷை காதலித்தபோது 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாகவும் மேலும் தன்னை திருமணம் செய்வதில் தினேஷுக்கு விருப்பமில்லை என்றும், தன்னுடைய பணத்தின்மீதே தினேஷின் கண் இருந்தது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து தன்னை திருமணமும் செய்யாமல் தன்னுடைய பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தினேஷால் மனமுடைந்த சந்தனா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

தற்போது தினேஷ் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :