Advertisement

இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார் துணிவு பட இயக்குனர் வினோத்

By: Nagaraj Fri, 13 Jan 2023 7:10:50 PM

இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார் துணிவு பட இயக்குனர் வினோத்

சென்னை: சபரிமலைக்கு சென்றார் இயக்குனர்... துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இயக்குனர் எச். வினோத் சபரிமலை சென்றார். வேண்டுதலை நிறைவேற்ற சென்றாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எச்.வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பாசிட்டிவ் விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளினார் எச் வினோத். அதன்பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், எச்.வினோத் இயக்கும் ஐந்தாவது படம் துணிவு. இப்படத்தின் மூலம் இயக்குனர் அஜித் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருடன் ஹாட்ரிக் கூட்டணியை எச்.வினோத் உருவாக்கினார்.

cinema,h. vinod,sabarimala,thunivu, ,எச். வினோத், சபரிமலை, சினிமா, துணிவு

துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி அதாவது நேற்று முன்தினம் வெளியானது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சியுடன் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் வாரிசு படத்தை துணிவு முந்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு படத்தின் இயக்குனர் எச் வினோத் சபரி மலைக்கு யாத்திரை சென்றார். எச்.வினோத் இருமுடி கட்டி சபரி மலைக்கு நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|