- வீடு›
- பொழுதுபோக்கு›
- 5 நாளில் ரூ.50 கோடி வசூல் செய்த சிம்புவின் ‘பத்து தல’
5 நாளில் ரூ.50 கோடி வசூல் செய்த சிம்புவின் ‘பத்து தல’
By: vaithegi Tue, 04 Apr 2023 2:34:32 PM
நடிகர் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று, ‘பத்து தல’ திரைப்படம் இன்றுடன் 6-வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த சமீபத்திய தகவலின்படி, 5 நாளில் உலகளவில் இப்படம் ரூ.50 கோடிகளை நெருங்கியது என கூறப்படுகிறது. கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படம் வெற்றி ரீமேக் போல் தெரிகிறது. ஆனால், படக்குழு இது பற்றி படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை, விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தூது இதுவரை இந்த படம் ரூ.48 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில்,6-வது நாளான இன்று ரூ.50 கோடி ரூபாய் வசூலை தாண்டி சிலம்பரசன் நடிப்பில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவாகவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், மற்ற இடங்களை ஒப்பிடும் போது, சொந்த மாநிலத்தில் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா இயக்கிய, ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டாராக நடிக்கிறார். மேலும், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் மற்றும் கலையரசன் போன்றோர் அந்தந்த துணை வேடங்களில் நடித்துள்ளனர்.