- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு
நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு
By: Nagaraj Fri, 09 Oct 2020 4:03:28 PM
இருவர் மீது வழக்குப்பதிவு... நிலம் வாங்கித் தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்தற்காக நடிகர் சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்
அன்பு வேல் ராஜனும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ்
அதிகாரியுமான ரமேஷ் குட்வாலாவும் சூரியிடம் கூடுதலாக 2 கோடியே 70 லட்சம்
ரூபாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பணத்தையும் திரும்பத்
தராமல், நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக நடிகர் சூரி
தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தயாரிப்பாளர் அன்புராஜன்
மற்றும் ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.