Advertisement

தான் நடித்த படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் விட்ட நடிகை

By: Nagaraj Fri, 25 Nov 2022 10:34:03 AM

தான் நடித்த படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் விட்ட நடிகை

ஐதராபாத்: தான் நடித்த படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து கதறி அழுதுள்ளார் நடிகை பிரியா வாரியார்.

ஒரு அடர் லவ் படத்தின் டீசரில் பிரியா வாரியர் கண்ணடிக்கும் சீன் ஒரே நாளில் இந்தியா முழுவதும் வைரல் ஆனதால் அவர் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் பெரிய பிளாப் ஆனது.

priya variyar,tears,film,hero,peace ,பிரியா வாரியார், கண்ணீர், படம், ஹீரோ, சமாதானம்

அதனால் அதற்கடுத்து பிரியா வாரியருக்கு எந்த படமும் பெரிதாக கிடைக்கவில்லை, வாய்ப்பு கிடைத்து நடித்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது பிரியா வாரியர் ஹீரோயினாக நடித்து இருக்கும் 4 இயர்ஸ் என்ற படத்தின் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டு இருக்கிறது.

என்ஜினியரிங் கல்லூரி காதல் ஜோடி பற்றிய கதை இது என்பதால் தான் 4 years என படத்திற்கு பெயர் வைத்து இருக்கின்றனர். இந்த படத்தை திரையில் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது பிரியா வாரியர் கதறி கதறி அழுதுள்ளார். ஆனால் இது ஆனந்த கண்ணீர். அந்த படத்தின் ஹீரோ அவரது கண்ணீரை துடைத்துவிட்டு சமாதானப்படுத்தி இருக்கிறார்.

Tags :
|
|
|