- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகை ராதா நடத்தி வரும் நிறுவனங்களில் 4 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்
நடிகை ராதா நடத்தி வரும் நிறுவனங்களில் 4 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்
By: Nagaraj Tue, 22 Dec 2020 8:20:18 PM
நடிகை ராதா நடத்தி வரும் நிறுவனங்களில் 4 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை. குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போகிறார்கள். அந்த வகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். 80, 90 களில் நடித்த தமிழ் சினிமா நடிகைகள் தங்களின் பட வாய்ப்புகளை படத்தில் எப்படி நடிக்கிறோம் என்பதை வைத்து தான் கமிட்டாவார்கள்.
ஆனால் தற்போதைய நடிகைகள் தங்களின் மார்க்கெட்ட்டை தக்க வைக்க இயக்குநர், தயாரிப்பாளர்களை கவரும் வகையில் ஆடைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் துளி ஆபாசம் இல்லாமல் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் தான் ராதா.
முதல் மரியாதை திரைப் படத்தை இன்றும் யாரும் மறக்க முடியாது. அந்த படத்தில்
நடிகர் சிவாஜி கணேஷனுடன் இணைந்து கலக்கியிருப்பார் ராதா. 1981 ஆம் ஆண்டு
தமிழில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழில் பல திரைப்படங்கள் நடித்து தமிழ்
சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
மேலும் இவர்
குடும்பப் பாங்கான படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். பல
முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்காக
கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்
அதன் பிறகு இவர் ராஜசேகரன் நாயர்
என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, துளசி,
விக்னேஷ் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். தன்னுடைய விருப்பப்படியே
கார்த்திகா, துளசி சினிமாவில் அறிமுகமானாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள்
அமையாமல் போனது.
கேரளாவில் `Uday Samudra Leisure Beach Hotel &
Spa, Uday Suites - The Garden Hotel, Uday Backwater Resort' என மூன்று
Five Star Hotelsகள் இவர்களுக்கு இருக்கிறது. மேலும் இது தவிர சினிமா
தியேட்டர், சாய் கிருஷ்ணா பள்ளி மற்றும் சென்னையில் ஸ்டுடியோ ஒன்றும்
இருக்கிறதாம்.
இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் மொத்தம் 4000
பணியாளர்கள் பணிபுரிய தொழில் வெற்றிகரமாக சென்றாலும் தங்களுக்கு பின்னர்
பொறுப்பை பிள்ளைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ராதாவின் ஆசையாம்.
இந்நிலையில் அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக தலை காட்டி வந்தவர்.
நல்ல கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவில் நடிக்கவும் தயாராகிக்
கொண்டிருக்கிறாராம்.