Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கேப்டன் மில்லர் படத்திற்காக தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் படக்குழு செட்

கேப்டன் மில்லர் படத்திற்காக தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் படக்குழு செட்

By: Nagaraj Sun, 22 Jan 2023 11:22:26 AM

கேப்டன் மில்லர் படத்திற்காக தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் படக்குழு செட்

சென்னை: கேப்டன் மில்லர் படத்திற்காக தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் படக்குழு செட் அமைத்துள்ளதாம். குற்றாலத்தில் நடக்கும் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த செப்டம்பரில் வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

captain miller,cinema,dhanush,filming, ,கேப்டன் மில்லர், சினிமா, தனுஷ், படப்பிடிப்பு

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணிகாயிதம் போன்ற படங்களை இயக்கிய அருணுடன் தனுஷ் இணைவது இதுவே முதல் முறை. 1930-40களில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து பீரியட் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷின் இசையில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷ் திடீரென வெளியேறியதாகவும், இதனால் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சமீபத்தில் பரபரப்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்காக தென்காசி மாவட்டம் வனப்பகுதியில் படக்குழு செட் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றாலத்தில் நடக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|