Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஊரடங்கால் நிறுத்தப்பட்டு இருந்த சக்ரா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

ஊரடங்கால் நிறுத்தப்பட்டு இருந்த சக்ரா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

By: Nagaraj Sun, 31 May 2020 10:32:31 AM

ஊரடங்கால் நிறுத்தப்பட்டு இருந்த சக்ரா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் டப்பிங் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது ‘சக்ரா’ திரைப்படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

chakra,dubbing work,initiation,vishal,curfew ,சக்ரா, டப்பிங் பணி, தொடக்கம், விஷால், ஊரடங்கு

ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக டப்பிங் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் படத்தை விரைவில் முடித்து ரிலீஸ் ரெடி செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|