Advertisement

ஆரவாரம் செய்த ரசிகர்கள்... கோபத்தில் வெளியேறிய நடிகர் ஆர்யா

By: Nagaraj Wed, 31 May 2023 08:19:50 AM

ஆரவாரம் செய்த ரசிகர்கள்... கோபத்தில் வெளியேறிய நடிகர் ஆர்யா

சென்னை: கோபித்துக் கொண்டு சென்ற ரசிகர்கள்... ஆரவாரம் செய்த ரசிகர்களால் நடிகர் ஆர்யா கோபித்துக் கொண்டு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஜூன் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடிகர் ஆர்யா, காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் விளம்பரத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

actor arya,fans,action,anger,exit,stage ,நடிகர் ஆர்யா, ரசிகர்கள், செயல், கோபம், வெளியேறினார், மேடை

அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி ஆகியோர் வருவதாக தகவல் தெரிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வணிக வளாகத்தில் குவிந்தனர்.

தொடர்ந்து வந்த நடிகர் ஆர்யா, மேடையின் மீது ஏறி திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். தொடர்ந்து, ரசிகர்களிடையே பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்குகளும் ரசிகர்கள் மீது சரிந்து விழுந்தது. பாதுகாவலர்களை தாண்டி மேடையில் ஏறிய ரசிகர்களால் கோபமடைந்த நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இத்னானி உடனடியாக மேடை விட்டு இறங்கி சென்று விட்டனர்.

Tags :
|
|
|
|