Advertisement

மணிரத்னம் – விக்ரம் மத்தியில் சண்டை... அதெல்லாம் எதுவுமே இல்லையாம்

By: Nagaraj Thu, 11 Aug 2022 9:11:42 PM

மணிரத்னம் – விக்ரம் மத்தியில் சண்டை... அதெல்லாம் எதுவுமே இல்லையாம்

சென்னை: இருவருக்கும் சண்டையா... அதெல்லாம் பொய் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆடியோ லாஞ்ச் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த படத்திற்காக வெகுவாக காத்து கொண்டிருந்த விக்ரமால் விழாவில் கலந்து கொள்ளமுடியாமல் நெஞ்சுவலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

vikram,character,no fight,mani ratnam,kollywood ,விக்ரம், கதாபாத்திரம், சண்டையில்லை, மணிரத்னம், கோலிவுட்

ஆனால் திரைவட்டாரத்தில் மணிரத்னத்திற்கும் விக்ரமிற்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. படத்தில் விக்ரமின் காட்சிகள் கொஞ்சமாக இருப்பதால் விக்ரம் வருத்தப்பட்டதாக கூறினார்கள்.

உண்மையில் நடந்ததே வேறு. மணிரத்னம் படத்தின் மூன்று கதாபாத்திரங்களை விக்ரம் கையில் கொடுத்து எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமோ தேர்வு செய்து கொள் என்று கூற விக்ரம் தான் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தை எடுத்தாராம்.

இதை பார்த்ததும் மணிரத்னம் புன்னகைத்தாராம். ஏனெனில் கதைக்கு முக்கியத்துவமான கதாபாத்திரமே அதுதான். தெரிந்து தான் எடுத்து இருக்கிறார் விக்ரம். அதனால் அவர் எதும் வருத்தப்படவில்லை என செய்திகள் வைரலாகி வருகின்றது.

Tags :
|