Advertisement

என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ...நடிகர் தீனா உருக்கம்

By: Monisha Sat, 12 Sept 2020 11:32:40 AM

என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ...நடிகர் தீனா உருக்கம்

என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ… என நடிகர் தீனா தனது இன்ஸ்டாகிராமில் நடிகர் வடிவேலு பாலாஜி மறைவு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி நேற்று முன்தினம் காலமானதை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் அதிர்ச்சி அடைந்தனர். வடிவேல் பாலாஜி அவர்களின் திடீர் மறைவு, சின்னத்திரை மற்றும் பெரிய திரைக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு இருக்கும் நிலையில், அவருடன் பணிபுரிந்த சக கலைஞர்கள் அவருடைய மறைவை இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். அந்த வகையில் வடிவேலு பாலாஜியால் தட்டிக்கொடுக்கப்பட்டு வளர்ந்து, தற்போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் காலூன்றி வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் தீனா.

screenplay,comedian,vadivelu balaji,actor dheena,melting ,சின்னத்திரை,நகைச்சுவை நடிகர்,வடிவேலு பாலாஜி,நடிகர் தீனா,உருக்கம்,

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேல் பாலாஜி குறித்து உருக்கமான கவிதை வடிவில் ஒரு போஸ்ட்டை பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

என்னை தட்டி கொடுத்த முதல் கை நீ….
என்னை பேச வைத்த என் குருவும் நீ…
அன்பை அள்ளி கொடுத்த என் அண்ணன் நீ….
அயராது உழைக்கும் ஒரு சிறந்த கலைஞன் நீ…
எங்களுக்கு நீ மறுபடியும் வேண்டும் எழுந்து வா ..
இல்லையென்றால் பிறந்து வா…
முதல் தடவ எங்கள கஷ்டப்படுத்திட்ட அண்ணே…

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார். தீனாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :