- வீடு›
- பொழுதுபோக்கு›
- எனக்கு சம்மன் வந்ததாக வந்த தகவல் பொய்: நடிகை வரலட்சுமி மறுப்பு
எனக்கு சம்மன் வந்ததாக வந்த தகவல் பொய்: நடிகை வரலட்சுமி மறுப்பு
By: Nagaraj Thu, 31 Aug 2023 6:47:44 PM
சென்னை: நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியது என்று தகவல்கள் பரவியது. இதற்கு வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
ஆனால், என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலை நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுத்துள்ளார்.இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கேரள மாநிலம் விழிஞ்சத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதன் பிறகு எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.