- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்த நீதிபதி
By: Nagaraj Fri, 29 July 2022 10:42:26 PM
சென்னை: உண்மை தன்மை... கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி பெங்களூரு விமானநிலையத்தில் , நடந்து வந்து கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதியை , மகா காந்தி என்ற நபர் திடீரென தாக்கியுள்ளார்.
அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மேற்கொண்ட விசாரணையில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டு அவர் கை கொடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் கண்டுகொள்ளாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர் நடிகர் விஜய் சேதுபதியை இழிவுபடுத்த எண்ணி அவரை விமானநிலையத்தில் தாக்கியுள்ளார். ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக அவர்மீது மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பின்னர் இதற்கு ஆஜராகி விளக்கமளித்த நடிகர் விஜய் சேதுபதி உண்மை தன்மையை ஆராய கேட்டுகொண்டார். மேலும், மகா காந்தி தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதையடுத்து, இதன் உண்மையை அறிந்த நீதிபதிகள் பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.