Advertisement

தி கேரளா ஸ்டோரி வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடி வசூல் வேட்டை

By: Nagaraj Thu, 11 May 2023 8:19:35 PM

தி கேரளா ஸ்டோரி வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடி வசூல் வேட்டை

கேரளா: இந்த வார இறுதியில் 37 க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகிறது. ” ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் கேரளாவைச் சேர்ந்த 32,000 இளம் இந்துப் பெண்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் படம் திரையிடப்பட்டு, பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்து அறிவித்தார்.

film,movie,the kerala story , தி கேரளா ஸ்டோரி, மூளைச் சலவை, மே 5ஆம் தேதி

அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அதா சர்மாவின் சாதனை இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாளை (மே 12) 37க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகை ஆதா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் படத்தைப் பார்க்க வரும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதை ட்ரெண்டிங் செய்பவர்களுக்கும், என் நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் 37 க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகிறது. ” ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|