- வீடு›
- பொழுதுபோக்கு›
- சீரியலில் வந்த காதல் காட்சிகளும் காரணம்; சித்ராவின் தாய் குற்றச்சாட்டு
சீரியலில் வந்த காதல் காட்சிகளும் காரணம்; சித்ராவின் தாய் குற்றச்சாட்டு
By: Nagaraj Sun, 20 Dec 2020 5:57:44 PM
சீரியலில் வந்த காதல் காட்சிகளும் காரணமாம்... சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் சீரியலில் நெருக்கமான காதல் காட்சிகளை வைக்க வேண்டாம் என தான் வலியுறுத்தியும் பெண் கதாசிரியர் கேட்கவில்லை என சித்ராவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த மாமனார் ரவிச்சத்திரன்.
இந்த நிலையில் சித்ராவின் மன அழுத்தம் அதிகரிக்க அவர் நடித்து வந்த சீரியல் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது, அவரது தாயாரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் 2 வருடத்திற்கும் மேலாக நெடுந்தொடராக எழுதி வருபவர் கதாசிரியர் பிரியாதம்பி.
இவர் கதையில் கொஞ்சம் காதல் காட்சிகளை தூக்கலாக வைத்ததால் வாரத்தின் 5
நாட்களும் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்துக்கு ஹேமந்த் தொல்லையாக
மாறியுள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னரும் காதல் காட்சிகள் அதிகம்
இடம் பெற்றதால் ஹேமந்த் சித்ராவின் தாயிடம், சீரியல் விவகாரத்தை
கூறியிருக்கிறார்.
இதையடுத்து சித்ராவின் தாய், பாண்டியன் ஸ்டோர்ஸ்
கதாசிரியர் பிரியா தம்பியை தொடர்பு கொண்டு காதல் காட்சிகளை குறைக்கச்
சொன்னதாகவும், அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் இணைப்பை துண்டித்து
விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து சீரியல் குழுவினருடன்
போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து பாண்டியன்
ஸ்டோர்ஸ் கதாசிரியர் பிரியா தம்பியிடம் இருந்து எந்த ஒரு விளக்கமும்
கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.