Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினியின் 170வது படத்தில் இந்த இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவிப்பு

ரஜினியின் 170வது படத்தில் இந்த இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 03 Oct 2023 4:35:32 PM

ரஜினியின் 170வது படத்தில் இந்த இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவிப்பு

நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக அறிவிய்ப்பு ... ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

laika company,rajini ,லைகா நிறுவனம் , ரஜினி

இதையடுத்து இப்படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்து உள்ளது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்று உள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என அவர் கூறினார்.

Tags :