Advertisement

செங்கோல் மீண்டும் உரிய இடத்திற்கு வந்துள்ளது... இளையராஜா பெருமிதம்

By: Nagaraj Sun, 28 May 2023 10:06:19 PM

செங்கோல் மீண்டும் உரிய இடத்திற்கு வந்துள்ளது... இளையராஜா பெருமிதம்

சென்னை: செங்கோல் தற்போது மீண்டும் உரிய இடத்திற்கு வந்திருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், தர்மபுரி ஆதீனம் செங்கோலை பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக இசைஞானி இளையராஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

music director,parliment,sengol ,இசைஞானி, இளையராஜா, செங்கோல்

புதிய கட்டிட திறப்பு விழாவை ஒரு குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் நான் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் எதிர்நோக்குகிறேன் என்றார் இளையராஜா.

பிரதமர் மோடி தலைமையில் புதிய இந்தியாவை உலகமே கொண்டாடுகிறது என்று கூறிய இளையராஜா, இந்த தருணத்தில் புதிய கொள்கைகளை தீர்மானிக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதை மனதார பாராட்டுகிறேன் என்றார்.

செங்கோல் பண்டைத் தமிழர்களின் பண்பாடும், பெருமையும் என்று கூறிய இளையராஜா, அரச குடும்பம் செங்கோல் ஏந்தி வெற்றிகரமாக ஆட்சி செய்து நீதி, ஒழுங்கு, நேர்மை, நெறிமுறைகளின் சின்னமாகப் போற்றப்பட்டது. அப்படிப்பட்ட செங்கோல் தற்போது மீண்டும் உரிய இடத்திற்கு வந்திருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

Tags :