- வீடு›
- பொழுதுபோக்கு›
- அதே இயக்குனர்களுடன் ஆந்தாலஜி திரைப்படத்தில் இரண்டாம் பாகம்!
அதே இயக்குனர்களுடன் ஆந்தாலஜி திரைப்படத்தில் இரண்டாம் பாகம்!
By: Monisha Tue, 22 Dec 2020 10:21:19 AM
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போதும் பல இரண்டாம் பாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் திரைப்படங்கள் போலவே ஆந்தாலஜி திரைப்படத்திலும் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சமீபத்தில் ஆந்தாலஜி திரைப்படமாக நெட்பிளிக்ஸில் வெளிவந்த படம் 'பாவக்கதைகள்' இந்தப் ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்காரா இயக்கிய 'தங்கம்', விக்னேஷ் சிவன் இயக்கிய 'லவ் பண்ண உட்றனும்', கௌதம் மேனன் இயக்கிய 'வான்மகள்' மற்றும் வெற்றிமாறன் இயக்கிய 'ஓர் இரவு' ஆகிய நான்கு பகுதிகள் இருந்தன.
இந்த ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நான்கு கதைகளும் ஆணவக்கொலைகள் சம்பந்தப்பட்ட கதை அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதேபோல் ஒரே கான்செப்டை கொண்ட நான்கு கதைகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாகவும் இதே 4 இயக்குனர்கள் தான் மீண்டும் ஒரு ஆந்தாலஜி திரைப்படத்திற்காக இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாவக்கதைகள் ஆந்தாலஜியின் இரண்டாம் பாகமாக 'காதல் கதைகள்' என்ற தலைப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் 'லஸ்ட் ஸ்டோரிஸ்', 'கோஸ்ட் ஸ்டோரீஸ்' ஆகிய ஆந்தாலஜி திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக வெளியாகி உள்ளன.