Advertisement

மாலில் தனக்கு நேர்ந்த கொடுமையை வருத்தத்தோடு கூறிய இளம் நடிகை

By: Monisha Sat, 19 Dec 2020 09:52:37 AM

மாலில் தனக்கு நேர்ந்த கொடுமையை வருத்தத்தோடு கூறிய இளம் நடிகை

இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தனக்கு நேர்ந்த கொடுமையை வருத்தத்தோடு இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'ஹெலன்' விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 'ஹெலன்' படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர் அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

"கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருந்தபோது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது.

young actress,mall,cruelty,kerala,guilt,beware ,இளம் நடிகை,மால்,கொடுமை,கேரளா,குற்ற உணர்ச்சி,ஜாக்கிரதை

அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது

ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி உள்ளது வெளியே செல்லும் என்னுடைய அம்மா தங்கை தோழிகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன்

இவ்வாறு தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|
|