Advertisement

தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

By: Nagaraj Fri, 16 Dec 2022 10:41:29 PM

தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: ஜனவரி 12 , 13 மற்றும் 18 ஆகிய நாட்களில் மட்டும் கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக பண்டிகை விடுமுறையை குறிவைத்து அதிகம் படங்கள் ரிலீஸ் ஆகும். வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. ரிலீஸ் தேதி தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் இந்த இரண்டு படங்களின் முன்பதிவு தொடங்கிவிட்டது.

permission,festival day,permission,letter to govt,courage,pictures ,அனுமதி, பண்டிகை நாள், அனுமதி, அரசுக்கு கடிதம், துணிவு, படங்கள்

அதன்படி ஜனவரி 12ம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பண்டிகை நாட்களில் தியேட்டர்கள் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக்கொள்ள அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

ஆனால் 12ம் தேதி பண்டிகை நாள் இல்லை என்பதால் அந்த தேதியில் 5 காட்சிகள் இயக்க அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். ஜனவரி 12 , 13 மற்றும் 18 ஆகிய நாட்களில் மட்டும் கூடுதல் காட்சி திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

Tags :