Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாதுகாப்பே இல்ல... பிரபல் சீரியல் நடிகை கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு

பாதுகாப்பே இல்ல... பிரபல் சீரியல் நடிகை கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு

By: Nagaraj Tue, 09 Aug 2022 10:45:26 PM

பாதுகாப்பே இல்ல... பிரபல் சீரியல் நடிகை கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு

சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய நடிகை... பிரபல சீரியல் நடிகை ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டு சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று 'கன்னத்தில் முத்தமிட்டால்'. இந்த சீரியலில் ஆதிரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மனிஷா நடித்து வந்தார்.

confusion,accusations,chinnatrai,actress manusha,shooting,security ,
பரபரப்பு, குற்றச்சாட்டு, சின்னத்ரை, நடிகை மனுஷா, படப்பிடிப்பு, பாதுகாப்பு

இந்நிலையில் நடிகை மனிஷா, சீரியலில் இருந்து திடீரென விலகினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிஷா, ஏன் சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.


இதற்கு சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள நடிகை மனிஷா, இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே சம்பளம் சரியாக தரவில்லை. பாதி சம்பளத்தை மட்டும்தான் தந்தார்கள்.

இதுவரை 6 லட்சம் ரூபாய் எனக்கு தரவேண்டும். அதை கேட்டால் என்னை இழுத்தடிக்கிறார்கள். அதேநேரம் படப்பிடிப்பின்போது பாதுகாப்பு என்பது கிடையவே கிடையாது. ஷாக் அடித்தால் கூட அப்படியே நடிக்க சொல்கிறார்கள்.


காலை 9 முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பு என்று சொல்வார்கள். ஆனால் 11 க்கு மேல் படப்பிடிப்பு நடைபெறும். இதை யாரும் கேட்கமுடியாது என்று அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை நடிகை மனுஷா வைத்தார். இவரின் இந்த குற்றச்சாட்டு சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :