Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • என் மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டனர்... நடிகை ரோஜா பகீர் புகார்

என் மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டனர்... நடிகை ரோஜா பகீர் புகார்

By: Nagaraj Fri, 30 Dec 2022 10:03:01 AM

என் மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டனர்... நடிகை ரோஜா பகீர் புகார்

ஆந்திரா: என் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டனர். இதனால் மகள் வேதனை அடைந்தார் என்று நடிகை ரோஜா அதிர்ச்சி புகார் தெரிவித்துள்ளார்.

90 -களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர், 1992 -ஆம் ஆண்டு "செம்பருத்தி" என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

2002-ல் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார் ரோஜா. இதன் பின் சின்னத்திரை ஷோக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்த இவர் , சமீபகாலமாக முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

photo,regret,actress roja,morphing,problems,mistake ,புகைப்படம், வருத்தம், நடிகை ரோஜா, மார்பிங், பிரச்சனைகள், தவறு

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர்," நான் சினிமா துறையிலும், அரசியலிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் சமீபத்தில் எனது மகளின் முகத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டனர். இதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தம் அடைந்தாள்.

'பிரபலங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான், இதை நினைத்து வருந்தாதே' என்று என் மகளுக்கு ஆறுதல் கூறினேன். சில சம்யங்களில் என்னுடைய புகைப்படத்தையும் மிக மோசமாக சித்தரித்து வருகின்றனர்". என கூறியுள்ளார்.

Tags :
|
|