Advertisement

எதிர்காலத்தை நினைத்து மணிமேகலை எடுத்த முடிவு?... செப் தாமு தகவல்

By: Nagaraj Thu, 09 Mar 2023 10:42:29 PM

எதிர்காலத்தை நினைத்து மணிமேகலை எடுத்த முடிவு?... செப் தாமு தகவல்

சென்னை: எதிர்காலத்தை நினைத்து எடுத்த முடிவு... குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர் வெளியேறினாரா என குழப்பமும் நிலவியது.

இருப்பினும் மணிமேகலை தான் வெளியே போனது ஏன் என்கிற காரணத்தை வெளிப்படையாக பேசவில்லை. அவர் கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலத்தில் ஒரு பெரிய farm ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதன் பூஜை புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர்.

manimekalai,future,conclusion,attention,sep damu,information ,மணிமேகலை, எதிர்காலம், முடிவு, கவனம், செப் தாமு, தகவல்

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வரும் தாமு அளித்த பேட்டியில் "மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவர் ஷோவை விட்டு போனது எங்களுக்கு loss தான்.அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் செய்கிறேன்."

"இது அவரது விருப்பம். அடுத்து ஆங்கர் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது" என தாமு கூறி இருக்கிறார்.

Tags :
|