Advertisement

நடிகர் மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம்

By: Nagaraj Sun, 25 June 2023 10:58:03 PM

நடிகர் மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம்

சென்னை: நான் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பை ஆரம்பிக்க மிகவும் தாமதம் ஆகி வருவதால் ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே தான் இந்த படத்தில் இருந்து நான் விலகினேன்” என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் மற்றும் விஜய்க்கு ஜோடியாக மிருகம் படத்தில் நடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் இருந்து பூஜா ஹெக்டே திடீரென விலகினார். இது தெலுங்கு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கு படங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பூஜா ஹெக்டே, தற்போது இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

dissival,mahesh babu,movie,pooja hegde, ,படம், பூஜா ஹெக்டே, மகேஷ்பாபு, விலகல்

இதனால் தான் மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என்று ரசிகர்கள் இணையதளத்தில் விமர்சித்துள்ளனர். வெளியேறியதற்கான காரணம் குறித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது உண்மைதான்.

ஆனால் படப்பிடிப்பை ஆரம்பிக்க மிகவும் தாமதம் ஆகி வருவதால் ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே தான் இந்த படத்தில் இருந்து நான் விலகினேன்” என்று கூறியுள்ளார்.

Tags :
|