- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆரியிடம் சண்டை போட்டவர்கள் வெளியேறினர்; ஜேம்ஸ் வசந்தன் கருத்து
ஆரியிடம் சண்டை போட்டவர்கள் வெளியேறினர்; ஜேம்ஸ் வசந்தன் கருத்து
By: Nagaraj Mon, 28 Dec 2020 9:29:37 PM
ஆரியிடம் சண்டை போட்டவர்கள் வெளியேறி உள்ளனர்... பிக்பாஸ் போட்டியாளர் ஆரி குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .
இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்தன் ஆரி தான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர் என்று பதிவிட்டு இருந்தார்.
தற்போது ஜேம்ஸ் வசந்தன் ,ஆரியிடம் சண்டை போட்டவர்கள் அனைவரும் வெளியே
சென்றுள்ளார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி சம்யுக்தா,
அர்ச்சனா, அனிதா ஆகிய மூவரும் ஆரியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து அவருடன்
சண்டை போட்டு வெளியே சென்றுள்ளார்கள்.
மேலும் வெளியே வந்தபின்
அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து இருப்பார்கள் . இதையடுத்து
அவர் இந்த வாரம் வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக
கூறியுள்ளார்.