Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பி பெற நாளை இறுதி நாள்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பி பெற நாளை இறுதி நாள்

By: vaithegi Wed, 27 Sept 2023 09:22:36 AM

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பி பெற நாளை இறுதி நாள்

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளையே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.வருகிற செப்டம்பர் 10-ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அருகே உள்ள பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்யப்பட்டன. டிக்கெட் பெற்றுக்கொண்டு ரசிகர்கள் இசைக்கச்சேரியில் நடைபெறுமிடத்திற்கு சென்ற நிலையில், அங்கு சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாமல் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் அத்துடன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ticket,ar raghuman music concert ,டிக்கெட்டு,ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி ஏற்பாட்டாளர்கள் மீது 2 பிரிவுகளின்கீழ் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் 7 ஆயிரம் பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளதாகவும், 3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகளை பரிசீலித்து, ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
|