Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உறுதிப்படுத்தாமல் மரண செய்தி... சின்னத்திரை நடிகர் மதுமோகன் விளக்கம்

உறுதிப்படுத்தாமல் மரண செய்தி... சின்னத்திரை நடிகர் மதுமோகன் விளக்கம்

By: Nagaraj Sat, 03 Dec 2022 09:09:15 AM

உறுதிப்படுத்தாமல் மரண செய்தி... சின்னத்திரை நடிகர் மதுமோகன் விளக்கம்

சென்னை: செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. என்ன இருந்தாலும் நான் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்று அறிவிக்க விரும்புகிறேன். நான் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறேன். அது நான் இல்லை என்று சின்னத்திரை நடிகர் மது மோகன் மறுப்பு அறிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் மதுமோகன் தமிழ் தொலைக்காட்சி தொடரான தென்றல், நாம் இருவர் நமக்கு இருவர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுமோகன் இறந்து விட்டதாக சில ஊடகங்கள் அறிக்கைகள் வெளியிட்டது.

actor madhumohan,credibility,death,news,denial ,நடிகர் மதுமோகன், நம்பகத்தன்மை, மரணம், செய்தி, மறுப்பு

இதையடுத்து தன்னுடைய மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: கொச்சியில் மதுமோகன் என்ற மற்றொரு நபர் காலமான நிலையில் தவறுதலாக சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.

செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. என்ன இருந்தாலும் நான் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்று அறிவிக்க விரும்புகிறேன்.

என்னுடைய மரணம் குறித்த செய்திகள் மற்றும் இரங்கல் செய்திகளை பெற்று மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன். நான் சென்னையில் இருக்கிறேன். விஜய் மற்றும் ஜீ தமிழில் ப்ராஜெக்ட் செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|