- வீடு›
- பொழுதுபோக்கு›
- குறையாத வசூல்... பாராட்டு மழையில் மணிரத்னம்; பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
குறையாத வசூல்... பாராட்டு மழையில் மணிரத்னம்; பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
By: Nagaraj Thu, 03 Nov 2022 8:34:14 PM
சென்னை: இன்னும் குறையாத வசூல்... லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவான இந்தப் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது.
இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இப்படி ஒரு வெற்றி பெற்றதற்காக தினமும் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் தனி விருந்து வைக்கிறார் மணிரத்னம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு விருந்து அளிக்கிறார். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நவம்பர் 5-ம் தேதி மணிரத்னமும், லைகா நிறுவனமும் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.