- வீடு›
- பொழுதுபோக்கு›
- வடசென்னை-2 எப்போது... இயக்குனர் வெற்றிமாறன் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
வடசென்னை-2 எப்போது... இயக்குனர் வெற்றிமாறன் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
By: Nagaraj Fri, 10 Mar 2023 06:47:27 AM
சென்னை: வாடிவாசல் படத்தை முடித்த பின்னர் வடசென்னை-2 இயக்குவேன் என்று இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாகவே கோலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றியடைந்து வரும் பெரும்பாலான திரைப்படங்கள் இரண்டாம் பாகத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகின்றன.
அந்த வகையில், சில வருடங்களுக்குமுன் வெளியான 'சாமி', 'சிங்கம்', 'காஞ்சனா', 'எந்திரன்', 'பீட்சா' என ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிபெற்ற படங்களின் 'பாகம்-2' திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
அந்த வரிசையில் செல்வராகவனின் இயக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை 2' போன்ற படங்களும் இருக்கும் நிலையில், 'வடசென்னை 2' குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே 'விடுதலை' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது, 'வட சென்னை 2' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அரங்கத்தையே அதிரவைத்தனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட வெற்றிமாறன், 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் பேசுகையில், 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்கள் ரிலீஸ் ஆன பின், சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்தை முடித்ததும், 'வட சென்னை 2' படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவேன் என தெரிவித்துள்ளர். வெற்றிமாறனின் இந்த அப்டேட்டால், அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகத்தில் உள்ளனர்.