Advertisement

விஜய் ஆண்டனி கதையில் உருவாக உள்ளது பிச்சைக்காரன் -2 படம்

By: Nagaraj Tue, 26 May 2020 3:00:11 PM

விஜய் ஆண்டனி கதையில் உருவாக உள்ளது பிச்சைக்காரன் -2 படம்

கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் பிச்சைக்காரன்.

விபத்து ஒன்றில் கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறார் கதாநாயகனின் அம்மா. எந்த மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் துறந்து, அடையாளத்தை வெளிப்படுத்தாமல் 48 நாள்கள் பிச்சைக்காரனாக நீ வாழ்ந்தால் உன் அம்மா பிழைப்பார் என ஒரு சாமியார் சொல்கிறார்.

இதனால் தன் அம்மா பிழைக்க வேண்டும் என்பதற்காக பணக்கார வாழ்க்கையைத் துறந்து பிச்சை எடுப்பார் கதாநாயகன். இந்த மையக் கதையுடன் பிச்சைக்காரர்களின் இயல்பான வாழ்க்கையையும் இணைத்து சுவாரசியமாகக் கதை செய்திருந்தார் இயக்குனர் சசி.

beggar 2,vijay antony,story,coming soon,expectation ,பிச்சைக்காரன்-2 , விஜய் ஆண்டனி, கதை, விரைவில், எதிர்பார்ப்பு

பிச்சைக்காரனாக நடிக்கும் செல்வந்தர் என்கிற கதையே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக அமைந்தது. இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சாதனை செய்தது. தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படம் (பிச்சகாடு) 100 நாள்கள் ஓடி அசத்தியது. ரூ. 50 லட்சம் உரிமைக்கு விற்கப்பட்ட தெலுங்குப் பிச்சைக்காரன், ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

இந்தளவுக்கு விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தில் சசி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில படங்கள் உள்ளதால் பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையைத் தான் எழுதி வருவதாக ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

இயக்கம், கதாநாயகி குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரியவரும். ஊரடங்குக் காலம் முடிந்த பிறகு பிச்சைக்காரன் 2 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|