- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்... குவிந்தனர் பனையூரில்
ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்... குவிந்தனர் பனையூரில்
By: Nagaraj Sun, 20 Nov 2022 5:00:28 PM
சென்னை: நடிகர் விஜய் ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என இயக்குனர் வம்சி அறிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராக உள்ளது.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி
மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று
கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க
நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்
இந்த செய்தியை
அறிந்த ரசிகர்கள் பனையூரில் குவிந்துள்ளனர். சேலம், நாமக்கல் மற்றும்
மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திக்க உள்ளதாக
கூறப்படுகிறது.