- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படப்பிடிப்பு நிறைவு
விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படப்பிடிப்பு நிறைவு
By: Nagaraj Sat, 14 Nov 2020 3:00:00 PM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தை இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்
விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன்
நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா,
ரித்விகா நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா
இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இருப்பதாக
படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இறுதி நாளை முன்னிட்டு கேக் வெட்டி
படக்குழுவினருடன் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.