- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிசியான நேரத்திலும் சூர்யாவுக்காக 3 பாடல்களைப் பாடிய விஜய்!
பிசியான நேரத்திலும் சூர்யாவுக்காக 3 பாடல்களைப் பாடிய விஜய்!
By: Monisha Sat, 13 June 2020 11:58:56 AM
நடிகர் விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த டான்சர் மாற்று சிறந்த பாடகர் ஆவார். சமீபகாலமாக அவர் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலாவது பாடி வருகிறார். தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தனது சமகால நடிகரான சூர்யாவுக்கு ஒரே படத்தில் மூன்று பாடல்கள் விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜயகாந்த் உடன் சூர்யா நடித்த திரைப்படம் ’பெரியண்ணா’. இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியன் இரண்டு பாடல்களும் மலேசியா வாசுதேவன், ஹரிஹரன் மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தலா ஒரு பாடல்களையும் பாடியுள்ளனர். மீதி மூன்று பாடல்களையும் சூர்யாவுக்காக விஜய் பாடியுள்ளார். இதில் இரண்டு பாடல்கள் தனியாகவும் ஒரு பாடலை ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார்.
பெரியண்ணா படம் உருவானபோது விஜய் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் நடித்து பிசியாக இருந்தார். இருப்பினும் விஜய் தான் நடிக்காத படத்தில் சூர்யாவுக்காக 3 பாடல்களை பாடிக் கொடுத்துள்ளார்.