Advertisement

பிதாமகனுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க இருந்த விக்ரம் – சூர்யா

By: Nagaraj Wed, 13 July 2022 3:43:47 PM

பிதாமகனுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க இருந்த விக்ரம் – சூர்யா

சென்னை: பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க இருந்தார்களாம் நடிகர் விக்ரம், சூர்யா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம், பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர்களின் நடிப்பில் அடுத்தடுத்த பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

மேலும் முக்கிய நடிகர்களான இவர்கள் இருவரும் டாப் நடிகர்களாக இருந்த போதே சேர்ந்து நடித்துள்ளனர். ஆம், கடந்த் 2003 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிதாமகன்.

சிறந்த திரைப்படம் என அரியப்பட்ட இப்படத்தில் சூர்யா, விக்ரம் என இருவருமே தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும் இப்படத்தில் நடித்தற்காக நடிகர் விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

siddharth,prithviraj,info,vikram,suriya,together ,சித்தார்த், பிரித்விராஜ், தகவல், விக்ரம், சூர்யா, இணைந்து

இந்நிலையில் அப்படத்திற்கு பின் இவர்கள் இருவரும் முக்கிய இயக்குநர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸாகி இருக்கிறது. இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவியத் தலைவன்.

இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் முதலில் நடிக்க தேர்வாகியுள்ளனர். பின் தேதி பிரச்சனை காரணமாக அவர்கள் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவர்களுக்கு பதிலாக சித்தார்த் மற்றும் பிரித்விராஜ் நடித்துள்ளனர். இத்தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Tags :
|
|
|