- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி கோயில் கோயிலாக சென்று சாமி தரிசனம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி கோயில் கோயிலாக சென்று சாமி தரிசனம்
By: Nagaraj Mon, 13 Mar 2023 11:32:39 PM
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி அடுத்த நாளே கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற ரோலில் நடித்து வந்த சாய் காயத்ரி கடந்த வாரம் திடீரென விலகுவதாக அறிவித்தார். அந்த தொடரில் தனது ரோலில் இனி வரும் சீன்களில் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் விலகிவிட்டதாக சாய் காயத்ரி கூறி இருந்தார்.
அதனால் ஐஸ்வர்யா ரோல் வில்லியாக மாற்றப்படுமா என கேள்வி எழுந்திருக்கிறது. அவருக்கு பதிலாக தற்போது VJ தீபிகா தான் ஐஸ்வர்யாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய பின் அவரது அம்மா உடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று பூஜை மேற்கொண்டு இருக்கிறார்.
திருநாகேஸ்வரம் ராகு கோவில், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் அவர் பூஜை செய்த வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.