Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சென்னையில் கச்சேரி நடத்த 6 மாதம் காத்திருக்கும் நிலை... ஏ.ஆர்.ரஹ்மான் பதிவால் அதிர்ச்சி

சென்னையில் கச்சேரி நடத்த 6 மாதம் காத்திருக்கும் நிலை... ஏ.ஆர்.ரஹ்மான் பதிவால் அதிர்ச்சி

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:14:56 PM

சென்னையில் கச்சேரி நடத்த 6 மாதம் காத்திருக்கும் நிலை... ஏ.ஆர்.ரஹ்மான் பதிவால் அதிர்ச்சி

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தால் அதிர்ச்சி... ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் கச்சேரி நடத்துவது பற்றி கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் படங்களில் பிசி ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மார்ச் 7ஆம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

ar. rahman,chennai,fans,opinion,heartbroken ,ஏஆர். ரஹ்மான், சென்னை, ரசிகர்கள், கருத்து, மனம் வருத்தம்

ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டைப் பார்த்த ரசிகை ஒருவர், சார், சென்னை என்றொரு நகரம் இருக்கிறது. உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் இசைப்புயலின் கண்களில் அந்த கமெண்ட் பட அவரோ, பெர்மிஷன்ஸ், பெர்மிஷன்ஸ், பெர்மிஷன்ஸ், 6 மாத கால ப்ராசஸ் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால் 6 மாத காலம் அலைக்கழிக்கப்படுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. நம் ஊர் பெருமையை நாம் தானே உலகிற்கு சொல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு அவரை அலையவிடாமல் உடனே அனுமதி வழங்க வேண்டாமா.

உதய்ணா தயவு செய்து இந்த விஷயத்தை கவனித்து இசைப்புயலுக்கு எளிதில் அனுமதி கிடைக்கச் செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசைப்புயல் இசையமைத்துள்ளாரே. அப்படி இருந்துமா அவரின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காலதாமதம் செய்கிறார்கள்.

நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரே. எதுவாக இருந்தாலும் ஒரு திறமைசாலியை மனம் வருந்தச் செய்யக் கூடாது. அவர் சென்னையில் நிகழ்ச்சி நடத்த உடனே அனுமதி அளிக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|