Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம் - இயக்குனர் செல்வராகவன்

நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம் - இயக்குனர் செல்வராகவன்

By: Monisha Sat, 23 May 2020 2:04:51 PM

நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம் - இயக்குனர் செல்வராகவன்

வெற்றி படங்கள் பலவற்றை தமிழ் திரையுலகுக்கு கொடுத்தவர் பிரபல இயக்குனர் செல்வராகவன். அவர் தற்போது இயக்கி முடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. புது தகவலாக அவர் விரைவில் தனுஷ் நடிப்பில் ’புதுப்பேட்டை 2’ திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது சமூக மற்றும் அர்த்தமுள்ள கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சற்று முன்னர் ஒரு கருத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

tamil cinema,director selvaraghavan,social network,twitter,very deep comment ,தமிழ் திரையுலகு,இயக்குனர் செல்வராகவன்,சமூக வலைதளப் பக்கம்,டுவிட்டர்,மிக ஆழமான கருத்து

இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்’ என்று கூறியுள்ளார்.

மிக ஆழமான ஒரு கருத்தை அனைவரும் புரியும் வகையில் மிக எளிமையாக கூறிய செல்வராகவனுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ’புதுப்பேட்டை 2’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களுக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் அவருடைய டுவீட்டுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :